"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்"
நமக்கு ரொம்ப பிடிச்ச குறள்.இது மாதிரி ஒரு பத்து குறள் அப்புறம் ஆத்திசூடி ,இது மட்டும் போதும் .ஒரு மனுசன் நல்ல வாழ்க்கைய நடத்துவதற்கு.ஆனா நல்லவனா இருக்குறதுக்கும் இளிச்சவாயனா ஆகுறதுக்கும் நூலிழை தான் வித்தியாசம்.
என் நண்பன் ஒருத்தன் அடிக்கடி சொல்லுவான்
‘கோமாளியா கூட இருக்கலாம்,ஆனா ஏமாளியா இருக்காத'
அப்படின்னு.ஆனா 'ஏமாளியா கூட இரு,ஏமாத்துறவனா இருக்காத' அப்படிங்கறது தான் நம்ம பாலிஸி.இதனால என்ன நன்மைன்னு கேட்குறீங்களா,நைட்டு படுத்தா பத்து நிமிசத்துல தூக்கம் வரும்.அது தான் நன்மை.
Monday, January 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
சரியாக சொன்னீர்கள்... பல 'ஏமாளி' நல்லவர்களின் உள்ள பிரதிபலிப்பு இது
நன்றி பிரபாகர்.
Post a Comment