Wednesday, April 29, 2009

தேறுமா திமுக

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது கூட்டணி பலத்தைப் பொறுத்து தான் எப்போதுமே இருக்கிறது.அந்த வகையில் இப்போது ஜெ கூட்டணி வலுவாக இருக்கிறது.ஈழப்பிரச்சினையிலும் தடாலடி ஸ்டண்ட் அடித்து நடுநிலைவாதிகளை தன் பக்கம் திருப்புவதில் வெற்றி கண்டுள்ளார் ஜெ.

சென்ற சட்டமன்றத்தேர்தலில் ஜெ, திருமாவுடன் கூட்டு வைத்ததால் கணிசமான தேவரின ஓட்டுகளை இழந்தார்.திமுக தென்மாவட்டங்களில் பெருவாரியான வெற்றி பெற்றது. இம்முறை திருமா , திமுக கூட்டணியில்.

சட்டக்கல்லூரியில் தேவரின மாணவர்கள் பட்ட அடிக்கு பழிவாங்குவார்கள் என்று தான் எண்ணமுடிகிறது.

கூட்டணி பலம்,தமிழீழ ஆதரவு,திருமா எதிர்ப்பு ஓட்டுகள் என்று அதிமுக பலமாக இருக்கிறது.எனவே நிறைய இடங்களை கைப்பற்ற சாதகமான சூழ்நிலை உள்ளது.தமிழர்களிடம் விசித்திரமான குணம் ஒன்று இருக்கிறது, குத்தினால் ஒரேயடியாக குத்தி உச்சாணிக்கொம்பிலே கொண்டு போய் வைத்து விடுவார்கள்.அப்படியொரு மாஸ் ஹிஸ்டீரியாவினால் அதிமுகவுக்கு நாற்பதுக்கு நாற்பது கிடைத்தாலும் கிடைக்கலாம்.அப்படியொரு வாய்ப்பை உருவாக்கத்தான் பல்லைக்கடித்துக் கொண்டு பல பொய்யுரைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டுள்ளார் ஜெயலலிதா என்றே கருத முடிகிறது.

1 comments:

Rajan said...

காங்கிரஸ்க்கு கொடி பிடிச்சதுக்காக காங்கிரஸோட சேர்ந்து திமுக உடன்கட்டை ஏறவேண்டியதுதான்.