Tuesday, February 26, 2008

கட்டபொம்மனும்,பருத்தி வீரர்களும்

ஆங்கிலப் படங்களை காப்பி செய்து தமிழ் படங்கள் எடுப்பதைத் தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்.தமிழ்ப் படம் ஒன்றை காப்பி செய்து வந்த ஆங்கிலப்படம் ஒன்றை பார்த்தேன் .அதுதான் 300 பருத்திவீரர்கள்.நம்முடைய வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே எடுத்திருக்கிறார்கள்.கதை மட்டுமல்ல , கதாநாயகனின் நடிப்பு கூட சிவாஜியை முழுவதுமாக உள்வாங்கி செய்திருப்பது போல் தெரிகிறது.

கட்டபொம்மனில் இருப்பதுபோலவே இதிலும் ஒரு எட்டப்பன் வருகிறார்,அதைப்போலவே இதிலும் தூது சொல்லி ஒருவர் வருகிறார்,அதைப்போலவே இதிலும் கதாநாயகன் இறுதியில் கொல்லப்படுகிறார்.

உள்ளத்தை கொள்ளைகொள்ளும் பலப்பல காட்சிகள் உள்ளத.தூதுவர் வரும் காட்சி மிரள வைக்கிறது.மண்டையோடு சகிதமாக கருங்கல் சிலையென வரும் தூதுவர் கதாநாயகனிடம் செய்தியை சொல்லாமல் மிரட்டும் தொனியில் பேசுவதும், அதற்கு கைமேல் பலனாக உயிரை விடுவதும் நன்றாக உள்ளது.

'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று அந்த கட்டழகு நாயகன் பேசும்போது நமக்கு புல்லரித்து தான் போய்விடுகிறது.சண்டை மற்றும் ஃபேண்டஸி கலந்து கட்டி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சண்டை ரசிகர்களுக்கும்,குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

0 comments: