Tuesday, February 26, 2008

கட்டபொம்மனும்,பருத்தி வீரர்களும்

ஆங்கிலப் படங்களை காப்பி செய்து தமிழ் படங்கள் எடுப்பதைத் தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்.தமிழ்ப் படம் ஒன்றை காப்பி செய்து வந்த ஆங்கிலப்படம் ஒன்றை பார்த்தேன் .அதுதான் 300 பருத்திவீரர்கள்.நம்முடைய வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே எடுத்திருக்கிறார்கள்.கதை மட்டுமல்ல , கதாநாயகனின் நடிப்பு கூட சிவாஜியை முழுவதுமாக உள்வாங்கி செய்திருப்பது போல் தெரிகிறது.

கட்டபொம்மனில் இருப்பதுபோலவே இதிலும் ஒரு எட்டப்பன் வருகிறார்,அதைப்போலவே இதிலும் தூது சொல்லி ஒருவர் வருகிறார்,அதைப்போலவே இதிலும் கதாநாயகன் இறுதியில் கொல்லப்படுகிறார்.

உள்ளத்தை கொள்ளைகொள்ளும் பலப்பல காட்சிகள் உள்ளத.தூதுவர் வரும் காட்சி மிரள வைக்கிறது.மண்டையோடு சகிதமாக கருங்கல் சிலையென வரும் தூதுவர் கதாநாயகனிடம் செய்தியை சொல்லாமல் மிரட்டும் தொனியில் பேசுவதும், அதற்கு கைமேல் பலனாக உயிரை விடுவதும் நன்றாக உள்ளது.

'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று அந்த கட்டழகு நாயகன் பேசும்போது நமக்கு புல்லரித்து தான் போய்விடுகிறது.சண்டை மற்றும் ஃபேண்டஸி கலந்து கட்டி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சண்டை ரசிகர்களுக்கும்,குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

Saturday, February 16, 2008

டவுசர் பாண்டியின் அட்டகாசங்கள்

ஜெமோவின் இணையப்பக்கங்களை மேய்ந்ததில் அவர் அனைத்து விஷயங்களையுமே கேலி செய்கிறார்.வரைமுறை இல்லாமல் கேலி செய்பவர்கள் அடிப்படையில் தன்மதிப்பு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.அவர் கேலியிலிருந்து தப்பிய விஷயம் எதுவென்று பார்த்தால் இந்து மதம் மட்டுமே மிஞ்சுகிறது.

பெரியாரின் இயக்கம் மலட்டு இயக்கம் என்று சொல்வதைப் பார்த்தால் இவர் ஒரு மூனாபூனாவாக இருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று அவரை வாசித்துப் பார்த்த நண்பர் ஒருவர் கூறுகிறார்.அறிவியல் புனைகதை எழுதுகிறேன் பேர்வழி என்று சித்தர்களின் கோவணத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தால் இந்த ஆள் பழைய பெருங்காய டப்பா என்று இன்னொரு நண்பன் அலுத்துக் கொள்கிறான்.இவர் பேண்டது,மோண்டது,வந்தது,போனது எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்,ஏனென்றால் அதுதான் இலக்கியம்.கட்சியிலே இருந்து கொண்டே காலை வாருகிறானே என்ன ஜென்மம்யா இவன் என்று தோழர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார்.அழியும் நிலையில் இந்து மதம் இருப்பதாகவும்,அதைக் காப்பாற்ற வந்த தெய்வப்பிறவியாகவும் இவருடைய எழுத்துக்கள் இருப்பதாக இந்து தேசிய பற்றாளர் ஒருவர் கூறுகிறார்.தனிப்பட்ட முறையில் அவரை கவனிக்கும் போது இந்தியாவின் பெருமையை இந்துமத எழுச்சியின் மூலம் மீட்டெடுக்க வந்த மாவீரனாகவே காட்சியளிக்கிறார்.எவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் நவீன இலக்கியத்தில் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை உணரமுடிகிறது.அவர் ஒரு டவுசர்பாண்டி* என்ற அளவிலே அவரை வாசிப்பது தவிர்க்க முடியாதது.
(டவுசர் பாண்டி-வழி கேட்டு வருபவனை சுத்தி விடுவது)
ஜெமோ பற்றிய இன்னொரு இடுகை.
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_15.html

Thursday, February 14, 2008

அழகு என்பது ஆண்பாலா,பெண்பாலா?

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

இப்படியும் ஒரு
பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை
தீர்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூச்சை விட்டான்

அழகு என்பது ஆண்பாலா;பெண்பாலா
என்பதில் சந்தேகம் இன்றுடன் தீர்ந்தது
அழகு என்பது
நிச்சயம் பெண்பாலடா.

கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும்
இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா.

(இதை எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை.அவரை வியந்து போற்றுகின்றேன்)