Sunday, November 9, 2008

சொந்தம்

கல்யாணம்னா சோத்துக்கு வருவான்
செத்தா சுண்டலுக்கு வருவான்.

இந்த தடாலடி தத்துவத்தில் உள்ள உண்மை என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. காசு,பணமுன்னு வர்றப்ப கட்டுன பொண்டாட்டியே பத்ரகாளியா மாறுகிற சூழ்நிலையில சொந்தமாவது,சுருத்தாவது. நம்மால அஞ்சு பைசாவாவது பிரயோஜனம் இருந்தா தான் ஒருத்தன் நம்மளை மதிக்கிறான்.அப்படி பிரயோஜனம் இருக்கற வரைக்கும் தான் பொண்டாட்டி,புள்ளை கூட மதிக்கும். பிரயோஜனம் இல்லாத சூழ்நிலையிலும் மதிக்கக்கூடிய மனைவி,மக்களைப் பெற்றிருப்பவன் உலகின் மாபெரும் கோடீஸ்வரன். ஆனா நம்மை மாதிரி மிடில்கிளாஸ் ஆசாமிகள் அந்த பொண்டாட்டி,புள்ளைகளையாவது சந்தோசப்படுத்தி அவங்க கிட்ட இருந்து மதிப்பு,மரியாதைய வாங்குறதுக்கு தான் பலவித வித்தைகளையும் வாழ்க்கையில செய்யவேண்டியிருக்கு. குடும்பத்தை நல்லா வச்சுக்கிட்டு , அதைத்தாண்டி ஒரு நாலு பேருக்கு நல்லது செஞ்சா அந்த நாலு பேரு அவனைத் தங்கள் தலைவனாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். நாலு பேருக்கு தலைவருங்கறதால அஞ்சாவது ஆளும் மரியாதை கொடுக்க ஆரம்பிக்கிறான். எவனும் மதிச்சா என்ன மதிக்காட்டி என்ன?போங்கடா புல்டாக்குகளா அப்படின்னு நினைக்கிறவன் சித்தன் ரேஞ்சுக்கு போயிடுறான்.'என்னத்த வாழ்ந்து,என்னத்த சாதிச்சு' இப்படி பொலம்புற என்னத்த கண்னையாக்களும் இருக்காங்க.எல்லா பேருக்கும் பொழப்பு ஓடிக்கிட்டு தான் இருக்கு.